கோவை குனியமுத்தூரில் கிடங்குக்குள் புகுந்து 5 நாட்களாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது.
குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் சிறுத்தை புகுந்ததாக, கடந்த திங்கட்கிழமை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு முகாமிட்ட வனத்துறையினர், கிடங்கையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர். சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்த அவர்கள், அதனுள் இறைச்சியையும் தண்ணீரையும் வைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட சிறுத்தை 4 நாட்களாக இறைச்சியை உண்ண கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டி வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு அந்த சிறுத்தை கூண்டினுள் பிடிபட்ட நிலையில், அதனை அடர் வனப்பகுதியில் விடுவிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாகவே தங்கள் பகுதியில் சுற்றி வந்த சிறுத்தை பிடிபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: தேசிய போர் நினைவுச் சுடருடன் ஐக்கியமாகும் அமர் ஜவான் ஜோதி: வரலாறும், சிறப்புகளும்!
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!