கேரளாவில் 100% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - பினராயி விஜயன்

கேரளாவில் 100% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - பினராயி விஜயன்
கேரளாவில் 100% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - பினராயி விஜயன்

கேரளாவில் 100% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100% பேருக்கு ( 2,67,09,000 பேர்) முதல் தவணை தடுப்பூசியும், 83% பேருக்கு ( 2,21,77,950 பேர் ) இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 33% பேருக்கு (2,91,271 பேர்) முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரில் 61 சதவீதம், அதாவது 9,25,722 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com