கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க, அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளாவில் கொரோனா முதல் இரண்டு அலைகளில் இல்லாத அளவாக, தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 357 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி அரசு ஊழியர்கள், வீட்டில் இருந்து பணிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தால் 12.70 லட்சம் பேர் பலி: லான்செட் மருத்துவ இதழில் தகவல்
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!