உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையாக கொரோனா பரவியுள்ளதால் தற்போது வரை உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா 3-வது அலை, முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும்போது கடுமையாக இல்லை என்றாலும் அதன் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் பரவல் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.
இதனையடுத்து கடந்த மாதம் முதலே உச்சநீதிமன்றம் முழுமையாக காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு மாறியது. இதுவரை 3-வது அலையில் மட்டும் 10 நீதிபதிகளுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்நிலையல், இரண்டு பேர் குணமடைந்து விட்டனர் எனினும் மீதமுள்ள 8 பேர் தற்போது தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்களை பொறுத்தவரை 400-ல் இருந்து 1200 பேர் வரை சமீபத்தில் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என தகவல்கள் சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவர்களுடைய உதவியாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவதால் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகளில் 30 சதவிகிதம் பாசிட்டிவ் என்ற முடிவை கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?