மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என சொல்லப்பட்டு வந்த ‘காலர்வாலி’ என்ற பெண் புலி உயிரிழந்துள்ளது. 16 வயதான அந்த புலி தனது வாழ்நாளில் மொத்தம் 29 குட்டிகளை ஈன்றது. அதில் 25 குட்டிகள் உயிருடன் தற்போது வாழ்ந்து வருகின்றன. அதனால் பென்ச் புலிகள் காப்பகத்தின் ‘சூப்பர் மம்மி’ எனவும் காலர்வாலி போற்றப்பட்டது.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் அதன் எண்ணிக்கையை பெருக்க உதவிய புலிகளில் காலர்வாலியின் பங்கும் கொஞ்சம் அதிகம். T15 என்ற பொது பெயரின் கீழ் இந்த புலி அழைக்கப்பட்டு வந்தது. இதன் கழுத்து பகுதியில் இரண்டு முறை ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அதன் காரணமாக காலர்வாலி என்ற பெயரை பெற்றது.
வயோதிகம் காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை காப்புக் காட்டு பகுதியில் காலர்வாலி உயிரிழந்துள்ளது. அதற்கு முந்தைய நாள் சுற்றுலா பயணிகள் அந்த புலியை பார்த்துள்ளனர். அந்த புலியின் மரண செய்தியை கேட்டு வன உயிரின புகைப்படக் கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
मप्र को टाइगर स्टेट का दर्जा दिलाने में महत्वपूर्ण भूमिका निभाने वाली, मध्यप्रदेश की शान व 29 शावकों की माता @PenchMP की ‘सुपर टाइग्रेस मॉम’ कॉलरवाली बाघिन को श्रद्धांजलि।
पेंच टाइगर रिजर्व की 'रानी' के शावकों की दहाड़ से मध्यप्रदेश के जंगल सदैव गुंजायमान रहेंगे। pic.twitter.com/nbeixTnnWv — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) January 16, 2022
மத்திய பிரதே மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த புலி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மத்திய பிரதேச காடுகளில் காலர்வாலியின் கர்ஜனை என்றென்றும் அதன் தலைமுறையின் வாயிலாக ஒலித்துக் கொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!