ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் தொடர்பான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தங்கள் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால். முன்னதாக ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வார்கள் என சொல்லியிருந்தார் அவர்.
Punjab CM face will be announced tomorrow at 12pm: AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/4oX3NBAiZI
— ANI (@ANI) January 17, 2022Advertisement
117 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது அக்கட்சி 12 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ளது. அந்த கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளானர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி