கேரளாவில் 1 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 21 முதல் பள்ளிகள் மூடப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தினசரி தொற்று 18 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1 முதல் 9; வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வரும் 21ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு வாரங்களுக்குப் பின்பு நோய்த் தொற்று; அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடக்கும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல கர்ப்பிணி அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் அமல்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 17-ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!