தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23, 975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 1,489 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தொடர்ந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்தது. ஜனவரி 11-ஆம் தேதி பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 13-ஆம் தேதி 20, 911 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 15-ஆம் தேதி 23,989 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23, 975 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட 14 பேருக்கு குறைவாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 12, 484 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி 683 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் 8, 987 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். முந்தைய நாளையவிட 9 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை, செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், கோவையில் 1,866 பேருக்கும், திருவள்ளூரில் 1,273 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 831 பேருக்கும், கன்னியாகுமரியில் 678 பேருக்கும், திருப்பூரில் 619 பேருக்கும், மதுரையில் 569 பேருக்கும், திருச்சியில் 453 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!