திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது சிறுமியை, திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாழப்பாடியை அடுத்த சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் சேட்டு போக்சோ சட்ட பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விரக்தியில் இருந்த சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவரது தந்தையும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சேட்டுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார்.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!