உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிற மாநில தலைவர்கள் களமிறங்கியுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அதீத முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேசம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு பிற மாநிலங்களை சேர்ந்த பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். சரத்பவார் வகுத்துள்ள இந்த வியூகம் அகிலேஷ் யாதவுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விரைவில் சமாஜ்வாதி கட்சியின் கரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என அக்கட்சியின் தலைவர்கள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சிவசேனா கட்சி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. சிவசேனா கட்சிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குகளை பிரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும் என கருதப்படுகிறது. அதேபோல், தெலங்கானாவை தளமாக கொண்டு செயல்படும் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளது.
இப்படி பிற எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் பின்னடைவை சந்திக்கும் என அந்தக் கட்சித் தலைவர்கள் வருந்துகின்றனர். பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே முடியும் என பிற எதிர்க்கட்சிகள் கருதுவது காங்கிரஸ் கட்சியில் உள்ள நம்பிக்கையை மேலும் பலவீனமாக்குகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை கைப்பற்ற தவறினால், 2024 பொதுத்தேர்தல் மற்றும் பிற மாநில சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெறுவது மேலும் கடினமாகிவிடும் என்று கருதப்படுகிறது
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'