எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே பகுதியில் அகதிகள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர்.
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. டைக்ரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த சூழலில், டைக்ரே பிராந்தியத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து அடிக்கடி ராணுவத்தால் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏராளாமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர், மேலும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், டெடிபிட் நகரில் அகதிகள் முகாமாக செயல்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!