கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஏக்கர் கணக்கில் பறிக்கப்பட்ட பூக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக, குப்பையில் கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், அதனை நம்பி வாழும் மலர் விவசாயிகள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கர் கணக்கில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சம்பங்கி, ரோஜா, விரிச்சிப்பூ, மல்லிகை, காக்காட்டான் பூ உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வரும் மலர் விவசாயிகள், கொரோனா கட்டுப்பாடுகளால் அவற்றை விற்பனை செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பூக்கள் அழுகி செடிகள் பாதிக்கும் என்பதால் கூலிக்கு ஆள்வைத்து பூக்களை பறிக்கின்றனர். இப்படி பறிக்கப்படும் பூக்களை, விற்பனை செய்யமுடியாமல் குப்பைகளில் வீசுவதாக மலர் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் பூக்கள் விற்பனை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு பூஜைகளுடன் நடப்பட்ட முகூர்த்தக்கால்
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்