இன்றைய தினம் தமிழ்நாட்டில் ஞாயிறு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பால் விநியோகம், சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன.
முழு முடக்கத்தையொட்டி, சென்னையில் சுமார் 500 இடங்களில் காவல்துறையினர் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 16,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். முன்களப் பணியாளர்களுக்கான பேருந்துகளும் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், காஞ்சிபுரம், ஈரோடு, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் ஏற்கெனவே 8 சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 23 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போதைக்கு 3, 800 காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல கோவையில், 11 எல்லைப்புறச் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு்ள்ளனர். மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.
தொடர்புடைய செய்தி: காவல்துறை வரலாற்றில் உளவுத்துறை ஐஜியாக பெண் அதிகாரி நியமனம் - யார் இவர்?
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!