மேலூர் அருகே ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சத்தியபுரத்தைச் சேர்ந்தவர் கோபி. இவர், தனது குடும்பத்துடன் நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், கோபி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து கோபி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி