நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்த மனு அளிப்பதற்காக, அ.தி.மு.க., திமு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய 7 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டனர்.
3 முறை சந்திக்க திட்டமிட்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாதநிலையில், அந்த மனு உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு “தமிழகத்தில் இனி நீட் தேர்வால் எந்த உயிரும் பறிபோகக் கூடாது என அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக மசோதா நிறைவேற்றினோம். தமிழக அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
மசோதா நிறைவேற்றி பல மாதங்களாகியும், உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அனுப்பவில்லை. கடந்த 10 நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் முயற்சி செய்து வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 29-ம் தேதி சந்திக்க சென்றோம்.
தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்களை, அரசியல் காரணமாக அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதா தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 3-வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!