இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் டெல்லியில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே அங்கு மஞ்சள் எச்சரிக்கை அளவை கொரோனா எட்டிய சூழலில், மெட்ரோ சேவையில் கட்டுப்பாடு - உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தினசரி பாதிப்பின் சதவீதம் 6.5 என உயர்ந்து இருப்பதால் வரும் நாட்களில் பாதிப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டுதான், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தின் முடிவில், டெல்லியில் பாதிப்பின் அளவு சிகப்பு எச்சரிக்கை அளவை எட்டும் பட்சத்தில் மேற்கொண்டு விதிக்கப்பட வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்தி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்