சென்னையில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கவும், விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக குழுக்கள் அமைத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உள்ளிட்டவை தீவிரமாகக் கண்காணிக்கப்படுமென அறிவித்துள்ளது. நோய்த் தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறியவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னையில் தினமும் 30 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன.
அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் அவ்வப்போது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அனைத்து வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அவற்றின் விடுதிகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்படும். இந்த இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்படும். இவ்விடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!