புதுச்சேரி முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கிடையே புத்தாண்டை பொதுமக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒமைக்ரான் காரணமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியில் அரசு அனுமதி வழங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுக்கத் தொடங்கினர். விடுதிகள், உணவகங்கள் நிரம்பி வழிந்தன. அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களே இந்நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி கடற்கரையில் கூடிய மக்கள், ஆடல் பாடலுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்த நேரிட்டது. புதுச்சேரியில் உள்ள கோயில்களிலும் தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்த பின்பு, மழை பெய்யத் தொடங்கியது.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'