தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தொழிலில் கவனம் செலுத்தும் வகையிலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நான் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. எனது பதவிக் காலத்தில் எனக்கு ஆதரவளித்து வந்த சங்க உறுப்பினர், நிர்வாகிகள், வீரர்கள், நகர மற்றும் மாவட்டங்களை சார்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 செப்டம்பரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ரூபா குருநாத். இந்திய நாட்டில் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்