சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் இன்று 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருக்கிறது. இதனால் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் பல்வேறு அறிவுறித்தல்களை வழங்கியுள்ளார். அதில், வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறது.
மேலும் இதனை கண்காணிக்காவிட்டால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், ஆர்டி- பிசிஆர் சோதனைகளை அதிகரிக்கவும் கூறியுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'