நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய விழாவான ஹெத்தையம்மன் பண்டிகை குன்னூர் ஜெகதளா கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக அப்பகுதியை சேர்ந்த 8 கிராம மக்கள் ஒன்று கூடி வெகு விமர்சையாக நேற்று இரவு கொண்டாடப்பட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் வண்ண விளக்கு அலங்கார தேரில் படுகர் இன மக்களின் ஆடல் பாடலுடன் ஹெத்தையம்மன் பவனி வந்தது, காண்போரை மகிழ்வித்தது.
இவ்விழாவில் 8 கிராமத்தை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரிய வெள்ளை ஆடை அணிந்து கலந்துக்கொண்டார்கள். 40 நாட்கள் விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் செங்கோல் ஏந்தி, ஜெகதளா கிராம மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று ஒன்றுகூடி அங்குள்ள மடிமனை ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் பலவண்ண ஹெத்தை குடையுடன் பாரம்பரிய நடனமாடி, ஹெத்தை அம்மனை ஊர்வலமாக தங்கள் கிராமத்தில் உள்ள ஹெத்தை அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
இரவு ஹெத்தை அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் படுகர் இனமக்களின் ஆடல் பாடலுடன் திருவீதி உலா நடைப்பெற்றது. மேலும் ஹெத்தை அம்மன் கோவில் முன் வளாகத்தில் தங்கள் பாரம்பரிய கோஷமிட்டு மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: ஓடும் ரயிலில் பிறந்தநாள் கொண்டாட்டம்: அபாய சங்கிலியை இழுத்த மாணவர்களால் பரபரப்பு
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்