முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரியும், இதற்காக டெல்லியில் போராடிய மருத்துவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் நாளை முதல் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
முதுநிலை நீட் கலந்தாய்வை விரைவில் நடத்த வலியுறுத்தி மருத்துவர்கள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இருந்து உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காவல்துறையினர் அடக்குமுறையுடன் நடந்துகொண்டதில் மருத்துவர்கள் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்தும், முதுநிலை நீட் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரியும் நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?