உத்தரப்பிரதேசத்தில் கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த தொழிலதிபர், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின், வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பான் மசாலா, குட்கா தயாரிக்கும் ஆலைகளை நடத்திவருகிறார். இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகள் சோர்ந்துபோயினர். மேலும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் கண்டறியப்பட்டன.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் தொழிலதிபர் பியூஷ் ஜெயினை கைதுசெய்துள்ளனர். பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருவாயை மறைத்தது, போலி ரசீதுகள் மூலம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Loading More post
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்