விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இருந்து 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், புதிதாக சிசிடிவி காட்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து, தள்ளு வண்டியில் சிறுவனை கிடத்திச் சென்ற இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியில் ஐந்து வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். முதற்கட்ட விசாரணையில் பட்டினியால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், சிறுவனை இருவர் தூக்கி வருவதும், பின்னர் தள்ளுவண்டியில் கிடத்திவிட்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், புதிதாக சிசிடிவி காட்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு: பேரணாம்பட்டு பகுதி மக்கள் அச்சம்
அதில், தள்ளுவண்டியில் சிறுவனை கிடத்திவிட்டு, இருவரும் பேருந்தில் ஏறிச்சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து கடலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளம் தெரியாத அந்த இருவரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்