இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.68 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்க பசைகளை கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னை மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டதோடு, அவர்களை தனிஅறைகளுக்குள் அழைத்துச் சென்று முழுமையாக சோதனையிட்டனர். அப்போது அவர்களின் உள்ளாடைகளுக்குள் பந்துகள் போன்ற பொருளை மறைத்து வைத்திருந்தனர். அவைகளை திறந்து பார்த்தபோது அதில், தங்க பசைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்க பசைகளை பறிமுதல் செய்து; 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி