திருநெல்வேலியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் வாத்தியார் R.S.ஜேக்கப், நேற்று இரவு 11 மணிக்கு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நெல்லை சதி வழக்கில் கைதான 93 பேரில், ஆர்.எஸ்.ஜேக்கப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சதி வழக்கில் இவருடன் சிறைவாசம் பெற்றவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு கதைகள் எழுதியவரும் மற்றும் போராடியவருமான ஆர்.எஸ்.ஜேக்கப், ‘வாத்தியார்’ என்ற நாவல் மூலம் பிரபலமானார். அதனாலேயே இவரை ‘வாத்தியார்’ ஜேக்கப் என்று மக்கள் அழைத்தனர். இவருக்கு தொழிலும் ஆசிரியர் என்பதால் பெயர்க்காரணமும் அப்படியே அமைந்து விட்டது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்