அதிமுகவில் கிளைக் கழகத்தை கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவு செய்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், ஓஎஸ்.மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசும்போது... அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்களை ஒன்றிணைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டும்.
காலியாக உள்ள இடங்களை புதிதாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இன்னும் நமக்கு சட்டமன்ற தேர்தலுக்கு 4.5 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் உள்ளது. மக்கள் மனதில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களிப்பார்கள்.
ஆனால் எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி நமக்கு தான் வாக்களிப்பார்கள், ஊராட்சி கிளை கழகத்தை வலுப்படுத்தினால் தான் நமது அமைப்பு வலுவான நிலையில் இருக்கும். கிளைக் கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும். இல்லையென்றால் 50 கோடி கொடுத்தாலும், ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. என்று பேசினார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்