பேரறிவாளனுக்கு பரோல் விடுப்பு கிடைக்க குரல் கொடுத்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய அற்புதம்மாள், “27 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாத பரோலுக்கு விண்ணப்பித்திருந்தோம். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பேரறிவாளனுக்கும் உடல்நிலை சரியில்லாததால் இருவருக்கும் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கலாம் என்றுதான் விண்ணப்பித்தேன். ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “இந்த வழக்கின் சட்ட நுணுக்கங்கள் எனக்கு தெரியவில்லை என்றாலும், வழக்கின் அடிப்படையிலேயே தவறுள்ளதாக தற்போது நீதிபதிகள் கூறியுள்ளனர். விரைவில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது நியாயமான கோரிக்கைதான் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே என் மகனின் வாழ்க்கை போய்விட்டது. பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆக வேண்டும் என்பதுதான் எனது ஒரே கோரிக்கை” என்று அற்புதம்மாள் கூறினார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்