குடிபோதையில் உணவக உரிமையாளர் உட்பட 3 பேரை தாக்கியதாக மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலையை சேர்ந்தவர் தேவராஜ் (42). இவர் பெரியமேடு ஈவிஆர் சாலையில் சொந்தமான உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு உணவகத்திற்கு குடிபோதையில் வந்த நான்கு பேர் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில் உணவு கொண்டு வர சிறிது நேரம் தாமதமானதால் கோபமடைந்த நான்கு பேரும் ஹோட்டல் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை கண்ட உணவக உரிமையாளர் தேவராஜ் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி, நான்கு பேரும் தேவராஜை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதை தடுக்க வந்த நபர்களை நான்கு பேரும் இணைந்து தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த தேவராஜ் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தேவராஜ் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே குடிபோதையில் அராஜகத்தில் ஈடுபட்ட மூன்று பேர், தர்பார் சிக்னல் அருகே ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பணியில் இருந்த காவல் துறையினர் மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெரியமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், புளியந்தோப்பை சேர்ந்த சீனிவாசன் மற்றும் மார்டின் என்பதும், இவர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உணவக உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!