நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாயானது முட்டை விலை. 12 நாட்களில் 50 காசுகள் விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 15 காசுகளும், 6-ம் தேதி 20 காசுகளும், 9-ம் தேதி 5 காசுகளும் உயர்ந்து தற்போது பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரேநாளில் 10 காசுகள் விலை உயர்ந்து 5 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது... வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கிய நிலையில், முட்டை நுகர்வு அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது.
அதே சமயம் வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை ஒட்டி கேக் தயாரிக்கும் பணிக்கு முட்டைகள் அதிகளவு கொள்முதல் செய்யப்படுவதால், தமிழகத்திலும் முட்டை தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர்வற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்