பாஜகவின் தொடர் போராட்டம் மற்றும் ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "போராட்டம் போராட்டம் என நடத்தி மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ விரும்பவில்லை" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
மதுரை சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். இதில் தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ‘அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை’ என்ற ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுக, பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அப்படி அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துகளுக்கு எப்படி நாங்கள் பதில் சொல்ல முடியும்? பாமகவினர் பேசுவதற்கு அதிமுகவின் தலைமை பதில் சொல்லும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் “தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா? போராட்டம், ஆளுநரை சந்திப்பது என செயல்படுகின்றனரே...” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித் தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். போராட்டம் போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ தலைவர்கள் விரும்பவில்லை” என பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், “நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அம்மா உணவகத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்” என்றார்.
- மணிகண்டபிரபு
தொடர்புடைய செய்தி: வேதா இல்லத்தை வாங்குகிறதா அதிமுக? - செல்லூர் ராஜூ பதில்
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்