அஜித் நடித்துள்ள விவேகம் படம் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில், முன்னணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் நாளே படத்தை பார்த்து ரசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விவேகம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டபோதும், பெரும் பணம் கொடுக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல திரையரங்குகளில் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பே முடிந்து விட்டன. இந்நிலையில் முதல்நாள் முதல்காட்சியை பார்த்து ரசிக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “சென்னையில் பெரும் கூட்டத்திற்கு இடையில் நாளை விவேகம் படத்தை திரையரங்கில் பார்க்க இருக்கிறேன். விவேகம் படம் வெளியாவதால் அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய நாளாக அமையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிக்கெட் முன்பதிவில் பாகுபலி-2 சாதனையை விவேகம் படம் முறியடித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!