இறந்தவர் பெயரில் போலி ஹோமியோபதி மருத்துவ படிப்பு சான்றிதழ் பெற்ற போலி மருத்துவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.
ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் ராஜசேகர், போலி சான்றிதழ் மோசடி குறித்து நடவடிக்கை கோரி, கடந்த ஆண்டு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் மூலம் இறந்தவர் பெயரில் போலி மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கவுன்சிலின் தலைவர் ஹனிமன், பதிவாளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட 15 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணையில் 2010-லிருந்து 2012 வரை 40 பேருக்கு போலி மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதில் 10 பேர் தானாக முன் வந்து போலி சான்றிதழை ஒப்படைத்த நிலையில் மீதமுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'