இதுவோ கல்யாண சீசன். ஊரெங்கும் கெட்டி மேளம் கொட்ட ‘ஜாம் ஜாம்’ என கல்யாணம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தம்பதியர் தங்களது வாழ்வில் திருமண பந்தத்தின் மூலம் இணைந்து வருகின்றனர். அதனை அவர்கள் மட்டுமல்லாது அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அப்படிப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் விருந்தினர்கள் உண்டது போக எஞ்சிய உணவுகளை தன் கையாலே உணவுக்காக ஏங்கி நிற்கும் மக்களுக்கு வழங்கியுள்ளார் மணமகனின் சகோதரி பாபியா கர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருந்த வறியவர்களுக்கு திருமண விருந்து கொடுத்துள்ளார் அவர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ‘யூஸ் அண்ட் த்ரோ’ தட்டில் அனைவருக்கும் உணவை விநியோகம் செய்துள்ளார் அவர்.
அதை எதேச்சையாக கவனித்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞர், அவரது செயலை தனது கேமரா லென்ஸ் வழியாக படம் பிடித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சகோதரி பாபியாவின் செயல் சமூக வலைதள பயனர்களின் மனங்களை வென்றுள்ளது. அதனால் அவரது படத்திற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!