முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் குவிந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நினைவு நாள் உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அனைவரும் உறுதியேற்றனர். கட்சியை அழிக்க பகல் கனவு காண்போரின் சதியை முறியடிக்கப் போவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர். ஜெயலலிதா நினைவிடம் செல்லும் அதிமுக நிர்வாகிகள், அருகில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை எம்ஜிஆர் நினைவிடத்திற்கு செல்லாமலேயே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதனைப்படிக்க...சென்னை: சசிகலாவுடன் தினகரன் திடீர் சந்திப்பு
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்