விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலும் பொதுமக்கள் பல இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. தேங்கியுள்ள மழைநீரில் மாணவர்கள் வகுப்பறைக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைநீரில் தேங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் போன்ற தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!