தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மழை விட்டு விட்டு பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றை ஒட்டியுள்ள நியூ காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இப்பகுதியில் 250க்கும் அதிகமான வீடுகள் உள்ள நிலையில், அங்கு வசிக்கும் பலர் முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
“ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்” - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் பள்ளிக்கரணை மேற்கு அண்ணாநகரில் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. அத்தியாவசிய தேவைக்குக்கூட வெளியே சென்று வர மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகரில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு வாரமாக வேலைக்குச் செல்லமுடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னை புறகர் பகுதியான ஊரப்பாக்கத்தில், ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததால் செல்வராஜ் நகர், எம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!