ஆம்பூர் அருகே உணரப்பட்ட நில அதிர்வு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது
29.11.2021 இன்று அதிகாலை சுமார் 4 மணி 17 நிமிடத்துக்கு வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகி இருப்பதாக தமிழக பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது. லேசான அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலஅதிர்வு சரியாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆந்திராவை ஒட்டிய வனப்பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1984, 2002, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அப்போதும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்