ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டரை மாத குழந்தை உயிரிழந்தது. மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது ராஜா. பெயிண்டர் தொழில் செய்யும் இவருக்கு கஸ்தூரி என்பவருடன் திருமணமாகி இரண்டரை மாத குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். குழந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தும் அவசர சிகிச்சை பகுதிக்கு அனுப்பி வைக்காமல் அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்ததால் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கமுடியாமல் போனதாகவும், அதனால்தான் தனது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆக்சிஜன் பொருத்தப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அலட்சியப்போக்காக இவர்களை வெகுநேரமாக மருத்துவமனை வெளியேயே நிறுத்தி வைத்திருந்ததாகவும், சிகிச்சை அளிக்கும் உரிய இடம் தெரியாததால் மருத்துவமனை வளாகப்பகுதிகளில் வெகு நேரமாக சுற்றி வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதனால் உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க முடியவில்லை. மேலும் அங்குள்ள ஊழியர்கள் ஆக்சிஜனை எடுத்துவிட்டதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இதனால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகை வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'நேஷனல் ஜியோகிராஃபிக்' இதழில் 1985இல் இடம்பெற்ற ஆப்கான் பெண்ணை அகதியாக ஏற்றது இத்தாலி
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்