பயமும், பாரபட்சமுமற்ற முறையில் நீதி பரிபாலனையில் ஈடுபடுவேன் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், அலஹாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிராமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் சக நீதிபதிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ. இறையன்பு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவி பிரமாணத்திற்கு பிறகு, உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி எம்.என்.பண்டாரி பொறுப்புத் தலைமை நீதிபதியாக பணிகளைத் தொடங்கினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வரவேற்பு விழாவில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்று பேசினர். ஏற்புரையாற்றிய பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நேற்றுமுதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளதாகவும், வணக்கம், நன்றி ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளேன் என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
தமிழகத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருந்ததாகவும், இப்போது உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றதன் மூலம் தனது கனவு நினைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதுபோல், நீதி பரிபாலனத்தில் பயமோ பாரபட்சமோ இருக்காது என்றும், விழாவில் நிறைய பேச விரும்பவில்லை என்றும், ஆனால் தன் செயலில் காட்டுவேன் என்றும் கூறியதுடன், அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி
பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர நாத் பண்டாரியின் சொந்த மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி ரவீந்திர சிங் சவுகான், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், முகமது ரபீக் ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகிக்கின்றனர். இவர்களில், ரவீந்திர சிங் சவுகான் டிசம்பர் 23ஆம் தேதி ஓய்வுபெற இருக்கிறார். அதன்பின்னர் அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் என்ணிக்கை 60ஆகவும் காலியிடங்கள் 15ஆகவும் உள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!