செவ்வாய் கிரத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க ஆல்கா எனப்படும் பாசி வகைகள் மற்றும் பாக்டீரியாவை 2020-ல் எடுத்துச்செல்ல நாசா முடிவெடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் க்யூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா வெண்வெளி ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்தப் போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்க போவதாக அறிவித்துள்ளார். அதற்காக ஒரு நபருக்கு ரூ.65 ஆயிரம் கோடி (10 மில்லியன் டாலர்) கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
பொதுவாக உயிரினங்கள் வாழ ஆக்ஸிஜன் தேவை. ஆனால் செவ்வாய் கிரக வழி மண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மிக குறைந்த அளவில் நைட்ரஜன் உள்ளிட்ட வாயுக்கள் உள்ளன. ஆதலால் உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்ஸிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு ஆல்கா எனப்படும் பாசி இனங்கள் மற்றும் பாக்டீரியாவை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. இந்த விண்கலம் மூலம் ஆல்கா எனப்படும் பாசி இனங்கள் மற்றும் பாக்டீரியாவை கொண்டு செல்கிறது. அங்கு இவை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த தகவலை நாசாவின் தலைமை நிர்வாகி ராபர்ட் லைட்புட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அங்கிருந்து ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்ப எரிபொருளாகவும் பயன்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மூலம் இத்திட்டம் சாத்தியமா என்ற கோணத்திலும் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளதாகவும் ராபர்ட் கூறினார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!