”ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை முடிந்து போன விஷயம். ஆனால், மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது” என்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் முன்னாள் செய்தித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ’ஜெய் பீம்’ படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய காட்சி வருவதும் அதை நீக்குவதும் என்பது சகஜமான ஒன்று. அதிமுக ஆட்சியின்போது சர்க்கார் திரைப்படத்தில் சில ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தன. அந்தப் படக் குழுவினரை அழைத்து பேசியதை தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதேபோன்று ஜெய்பீம் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளில் சில குறியீடுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டு விடப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். எனவே இப்பிரச்சனையை முடிந்து போனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது. கருத்தினை தெரிவிப்பது நமது உரிமை - அந்த உரிமைக்கு அவர்கள் செய்து கொடுத்து இருக்கிறார்கள். இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர், எனவே, மேலும் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய விஷயம் அல்ல” என்று கூறினார்.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்