சென்னைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 7ஆம் தேதிக்கு பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 250 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஏரியின் நீர் இருப்பு அதிகரித்து வந்ததாலும், சென்னையில் நாளை மீண்டும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 அடி நீர் மட்டம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடிக்கும் மேல் நீர் உள்ளது. அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 2 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே> சென்னையில் இன்று மிக கனமழை, நாளை அதி கனமழை - தமிழகம் முழுவதும் முழு ரிப்போர்ட்
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்