இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்குள் அணியில் உள்ள இந்த இரண்டு முக்கிய இடங்களுக்கான இடைவெளியை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மண்.
“அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்து வரும் ஒரு ஆண்டுக்குள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி டி20 ஆட்டத்தை அணுகும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 50 ஓவர் போட்டிகளை போல இதை விளையாட முடியாது.
அணியில் உள்ள அனைவரையும் முழு மனதுடன் ஊக்கம் கொடுத்து அரவணைத்து செல்லும் பணியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா செய்தாக வேண்டும்.
மறுபக்கம் ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்களில் இரண்டு கேப் (இடைவெளி) இருப்பதாக நான் பார்க்கிறேன். அதில் முன்னுரிமை மிக்க வீரராக மிதமான வேகத்தில் பந்து வீசக் கூடிய பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது. அது ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அல்ல என்பதை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ய வேண்டும். இது கேப்டன் தனது ஆடும் லெவனை எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு செய்ய உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்