மத்தியப் பிரதேச அரசுத் துறைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி. தலைநகர் போபாலில் இதை தெரிவித்த அவர், வனத்துறை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும் என்று கூறினார். ப்ளஸ் 2 வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான கல்லூரிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் சவுகான் அறிவித்துள்ளார். தான் முதலமைச்சரான பிறகு மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்வோம் என்ற திட்டத்தின் கீழ் 43 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் சவுகான் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய மகள்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் அளிக்கிறேன். வனத்துறையைத் தவிர்த்து மற்ற துறைகளில் இது அமல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா படைக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளோம்” என்று சவுகான் கூறினார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?