இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் இல்லத்தை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் நடத்திய கொலைமுயற்சியில் இருந்து அவர் உயிர்தப்பினார்.
ஒரு ட்ரோன் பிரதமரின் வீட்டை குறிவைத்து தாக்க முயன்றது என்றும், இதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஈராக் பிரதமரின் ட்வீட்டில், "துரோகத்தின் ராக்கெட்டுகள் விசுவாசிகளை சோர்வடைய செய்யாது” என்று கூறினார்.
மேலும், “மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும், சட்டத்தை அமல்படுத்தவும் உழைக்கும் நமது வீரமிக்க பாதுகாப்புப் படைகளின் உறுதியும், போராட்டமும் தளர்ந்துவிடாது. நான் நலமாக இருக்கிறேன், கடவுளை போற்றுகிறேன். ஈராக் நலனுக்காக அனைவரிடமிருந்தும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் நடந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இதனைப்படிக்க...கனமழை எதிரொலி : சென்னையில் ரயில்கள் புறப்பாடு தாமதம்!
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்