நாகர்கோவிலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி எதிரே அமைந்துள்ள பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிதாசன். இவரது மனைவி சரோஜா( வயது 67). இன்று வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு சரோஜா நடந்து வரும் வேளையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் சரோஜாவின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
சரோஜா நடந்து செல்லும்போது பின்பக்கமாக சென்று சங்கிலியை பிடித்து இழுத்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். மேலும் அந்த நபர் சரோஜாவின் சங்கிலியை பிடித்து கொடூரமாக இழுத்ததில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்விடம் வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இந்த கொடூர காட்சி பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனைப்படிக்க...டெல்லி: தீபாவளி முடிந்து 2 நாட்களாகியும் மோசமான அளவில் காற்று மாசு
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?