தீப ஒளியில் ஜொலித்த சரயு நதிக்கரை: 9 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை

தீப ஒளியில் ஜொலித்த சரயு நதிக்கரை: 9 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை
தீப ஒளியில் ஜொலித்த சரயு நதிக்கரை: 9 லட்சம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரயு நதிக்கரையில் 9 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசு சார்பில் அயோத்தியில் கடந்த ஆண்டு 6 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. அதனை இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில் 12 லட்சம் தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அயோத்தியில் 3 லட்ச தீபங்களும், சரயு நதிக்கரையில் 9 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன.

இருளை கிழித்து சுடர்விட்ட தீபங்களால் சரயு நதிக்கரை முழுவதுமே பிரகாசமாக ஜொலித்தது. அதே போல் அயோத்தியில் லேசர் மின்விளக்கு ஒளிர, வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com