வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் பொன்முடி

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் பொன்முடி
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் பொன்முடி

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும்.

உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து 10.5% இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும். பல்வகை தொழில்நுட்ப கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும்'' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com