தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஒரு ஆட்டிற்கு 1000 ரூபாய் வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதாவது 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள், இப்போது 7,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வரவில்லை என்றாலும் ஆடு விற்பனை கடந்த சில வாரங்களில் இல்லாத வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூடுபிடித்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழையால் வியாபாரம் பாதிக்காத வகையில் நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஆட்டுசந்தை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்தி: உளுந்தூர்பேட்டை சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமையான இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகின்றது. புதுக்கோட்டை நகரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வழக்கமாக நடைபெறும் இடத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மழையால் பாதிக்காதவாறு நகராட்சி சார்பில் சந்தைப்பேட்டை பகுதியில் கூடாரம் உள்ள இடத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகின்றது.
புரட்டாசி மாதம் தொடர்மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில வாரங்களாக ஆடு விற்பனை இல்லாததாலும் போதிய அளவு விலை கிடைக்காததாலும் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஒரு ஆட்டிற்கு 1,000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாகவும் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வரவில்லை, ஆடுகளும் வரத்து குறைவாகவே உள்ள போதிலும் தீபாவளி பண்டிகை காரணத்தால் ஆடு விற்பனை கடந்த சில வாரங்களில் இல்லாத வகையில் தற்போது சூடுபிடித்துள்ளதால் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வியாபாரிகளும் கடந்த சில வாரங்களாக ஆட்டிறைச்சி வியாபாரம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் நல்ல முறையில் இருக்கும் என்றும் இறைச்சி விலையும் அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?